Latest News

September 29, 2013

தென் பகுதி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறது!- சுமந்திரன்
by Unknown - 0

தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.
அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்களை தவறான முறையில் வழிநடத்தி, தவறான எண்ணத்தை தென் பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்ற இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் சுமந்திரன் கூறினார்.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு அடுத்த வருடம் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் பகுதியில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அந்த கட்சி தெற்கில் மாகாண சபைகளில் ஆசனங்களை கைப்பற்றும் முதல் முயற்சியாக அது அமையும்.
« PREV
NEXT »

No comments