Latest News

September 16, 2013

தொடர்ந்தும் தாக்கப்பட்டால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் - தமிழக மீனவர்கள்
by Unknown - 0

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். இது தொடர்பில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 20 ஆம் திகதி பல்வேறு மீனவ இயக்கங்கள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

மேலும், இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து, தற்காத்துக்கொள்ள, அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments