Latest News

August 11, 2013

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தமி­ழர்­களின் சுய நிர்­ண­ய உரிமையினை வெளிப்­ப­டுத்த வேண்டும்! - வீ.ஆர். வர­த­ராஜா
by admin - 0


தமி­ழ­ருக்­கெ­தி­ரான போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்க சர்­வ­தேச விசா­ர­ணையை புலம்­பெயர் தமிழ் மக்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால், தற்­போது வெலி­வே­ரிய சிங்­கள மக்­களும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கெ­தி­ராக சர்­வ­தேச விசா­ரணை தேவை எனக் குரல் எழுப்பி வரு­கின்­றனர். காலக் கண்­ணாடி சுழலும் தன்மை கொண்­டது....!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் எங்­ஙனம் அமைய வேண்டும் என்­பதில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் ஆர்வம் கொண்­டுள்­ளன. தமி­ழரின் நியா­ய­மான உரிமைக் குரல் அதில் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் அவை குறிப்­பிட்­டுள்­ளன.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீது அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க எந்த ஒரு புலம்­பெயர் அமைப்பும் விரும்­ப­வில்லை. அதே­நே­ரத்தில் தாயகத் தமி­ழர்கள் படும் இன்­னல்­க­ளையும், அவர்கள் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் இலங்கை அர­சினால் நடத்­தப்­ப­டு­வ­தையும் உரத்துக் கூற வேண்­டிய நேரம் இது.

வட­மா­காண சபை தேர்தல் மூலம் தமி­ழ­ருக்கு எவ்­வித தீர்வும் கிடைக்­காது என்­பது அனை­வரும் அறிந்த உண்மை. ஆனால் அந்தத் தேர்­தலை சர்­வ­தேசம் உற்று நோக்க ஆரம்­பித்­துள்­ளது. எனவே, தமி­ழர்கள் தமது நிலைப்­பாட்­டினை தெளி­வாகத் தெரி­விக்கும் கட்­டாயம் எழுந்­துள்­ளது. அத­னால்தான் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இங்கு முக்­கி­யத்­துவம்
பெறு­வ­தாக புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் சுட்டிக் காட்­டி­யுள்­ளன.

குறிப்­பாக பிரித்­தா­னிய தமிழர் பேரவை நான்கு முக்­கிய விட­யங்­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சேர்த்துக் கொள்­ளு­மாறு கேட்­டுள்­ளது. அதன் மூலம் தாயகத் தமிழ் மக்­களின் விருப்­பத்­தினை கூட்­ட­மைப்பு சர்­வ­தே­சத்தின் முன் வைக்க முடியும்.

1. தாயகத் தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். தம்மைத் தாமே தமது தாயக மண்ணில் நிர்­வ­கித்துக் கொள்ளும் உரிமம் இவர்­க­ளி­டமே வழங்க வேண்டும்.

2. மிகப் பெரிய பேர­ழிவை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய போர்க்­குற்றம் தொடர்­பான சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம்.

3. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழர் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வது நிறுத்­தப்­பட வேண்டும். அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் அனைத்தும் திருப்பி வழங்­கப்­பட வேண்டும்.

4. வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்த நிர்வாகக் கட்­ட­மைப்பு போன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதில் புலம்­பெயர் தமிழ் மக்­களும் சேர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும்.

பிரித்­தா­னிய தமிழர் பேரவை தெரி­வித்­துள்ள இந்­நான்கு கோரிக்­கை­களும் கூட்­ட­மைப்­பிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அவை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சேர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.
இவை­போன்ற கோரிக்­கை­களை புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் விடுப்­ப­தற்கும் சில கார­ணிகள் இருக்­கின்­றன. சர்­வ­தே­சத்தின் அழுத்தம் என்­பது இலங்கை அரசின் மீது பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது போது­மா­ன­தாக இல்லை.

முழு­மை­யான அழுத்தம் வரு­மே­யானால் இலங்கை அரசு சர்­வ­தே­சத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நிச்­ச­ய­மாக முன்­வரும். குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்க நட­வ­டிக்கை எடுக்கும். எனவே, தமிழ் மக்கள் தரப்பில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் உல­கெங்­கிலும் ஜன­நா­யகப் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றன. உலக நாடுகள் இலங்கை அரசை தட்டிக் கொடுப்­பதை விடுத்து
தண்­டனை வழங்கி வழிக்குக் கொண்டு வரவேண்டும். புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் பிரிந்து நின்­றாலும் இணைந்து வெளி­யிடும்
செயற்­பா­டுகள் இது. வட­மா­காண சபை தேர்­தலை ஒரு கருத்துக் கணிப்­பாக உலகம் சீர்­தூக்கி பார்க்க முற்­ப­டு­கின்­றது.

அத­னால்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னமும் தாக்­க­மிக்­க­தாக இருக்க வேண்டும் என அவை எதிர்­பார்க்­கின்­றன.
வட­மா­காண சபைத் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் தமிழர் பிரச்­சி­னையை தமிழர் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினால் தீர்த்து வைக்க முடி­யாது. ஆனால், தமிழர் போராட்­டத்தை அடுத்த கட்­டத்­துக்கு நகர்த்த ஒரு தூண்­டு­தலை ஏற்­ப­டுத்த முடியும். ஏனைய மாகாண சபை தேர்­தல்­களில் தேர்தல் விதி முறைகள் மீறப்­பட்­டி­ருக்­கலாம். இருப்­பினும், வட­மா­காண சபைத் தேர்­தலில் தேர்தல் விதி­மு­றைகள் மீறப்­பட்டால் அது
உட­ன­டி­யா­கவே சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­படும்.

வட­மா­காண சபைத் தேர்­தலை கண்­கா­ணிக்க சர்­வ­தேச கண்காணிப்புக்­குழு அவ­சி­ய­மில்லை என இலங்கை அரசு ஆரம்பம் முதலே கூறி
வரு­கின்­றது. அது ஓர் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் என அரசு குறிப்­பி­டு­கின்­றது. ஆனால் பொது­ந­ல­வாய அமைப்பு பிர­தி­நி­திகள் குழு,
அவ்­வா­றான கண்காணிப்புக்­குழு அவ­சியம் என பரிந்­து­ரைத்­துள்­ளது. எனவே, வட­மா­காண சபை தேர்­தலைக் கண்­கா­ணிக்க சர்­வ­தேசக் குழுவை அழைக்க வேண்­டிய நிலை இலங்கை அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை நாம் கண்­கா­ணிப்­புக்­கு­ழு­வாக அழைக்க முடி­யாது என அரசு தற்­போது தெரி­வித்து வரு ­கின்­றது. இருப்­பினும் தேர்­தலை கண்­கா­ணிக்க சர்­வ­தேச கண்காணிப்புக்­குழு­வுக்கு அனு­ம­தி­ய­ளிக்க வேண்­டிய நிலை அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது என்­பதை இங்கு
குறிப்­பிட்­டாக வேண்டும். கடந்த சில நாட்­க­ளாக பொது­ந­ல­வாய அமைப்பு நாடு­களின் பிரதிநிதிகள் குழு­வொன்று வட­மா­கா­ணத்தில் பல ஆய்­வு­களைச் செய்து வந்­தது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்­களின் பரிந்­துரை அமைந்­தது.

பொது­ந­ல­வாய அமைப்பு மாநாட்டின் தலை­வ­ராகப் போகும் ஜனா­தி­ப­தி­யினால் அதனைத் தட்டிக் கழிக்க முடி­ய­வில்லை. தேர்தல் விதி­களை மீறி அரசின் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­களில் கூட அர­சுக்கு ஆத­ர­வாக பரப்­பு­ரைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக புகா­ரி­டப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே தாம் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு வேட்­பாளர் ஒருவர் முறைப்­பாடு செய்­துள்ளார்.
இம்­மு­றைப்­பாடு சாவ­கச்­சேரி நீதி­மன்ற விசா­ர­ணைக்கு வந்­தது. இது குறித்து காவல் துறை­யினர் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என சாவ­கச்­சேரி நீதிவான் உத்­த­ர­விட்­டுள்­ளதும் இங்கு குறிப்­பி­டக்­கூ­டிய விட­ய­மாகும்.

இதே­போன்று சிங்­கள ஜாதிக்க பெர­முன என்ற அமைப்பும் வட­மா­காண சபை தேர்­தலை நிரா­க­ரிக்கக் கோரி மனு­வொன்றைத் தாக்கல்
செய்­திருந்­தது. அந்த அமைப்பின் தலைவர் விஜித ரோஹண விஜயமுனி முன் னாள் கடற்படை வீரர். ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன இருந்த போது முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­திக்கு இரா­ணுவ மரி­யா­தையை வழங்­கினார். அப்­போது துப்பாக்கிப் பிடி­யினால் அவரைத் தாக்­கி­ய­வர் தான் விஜ­ய­முனி. அப்­போது அவ­ருக்கு மன­நிலை குன்­றி­யவர் எனக் காரணம் காட்டி, அவரை கண்­டிக்காமல் மன­நோ­யா­ளிகள் மருத்­துவ விடு­திக்கு அனுப்­பினார் அன்­றைய ஜனா­தி­பதி அவர் இப்­போது அர­சியல் கட்­சிக்கு தலை­வ­ராகப் பதவி வகிக்­கிறார்.
அவர் எப்­போது மன­நோ­யா­ளி­யானார், எப்­போது குண­மானார் என்­பதும் அந்த ஜனாதி­ப­திக்கே தெரியும்....!

அப்­ப­டிப்­பட்ட விஜித ரோஹண விஜய முனி மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதி­ய­ர­சர்கள் நிரா­க­ரித்து விட்­டனர். அவரின் கட்சி ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என தேர்தல் ஆணை­யாளர் குறிப்­பிட்­ட­தினால் மனு நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக தீர்ப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வட­மா­காண சபைத் தேர்­தலில் வேறு மாகா­ணங்­களில் இல்­லாத அளவு 14 அர­சியல் கட்­சி­களும், 16 சுயேச்சை குழுக்­களும் கள­மி­றங்­கி­யுள்­ளன. ஆனால் போட்டி என்று எடுத்துக் கொண்டால் இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டையே மாத்­தி­ரமே உள்­ள­தாக பலரும் குறிப்­பி­டு­கின்­றார்கள். ஏனை­யவை தமிழர் வாக்­கு­களைப் பிரிப்­ப­தற்­காக களம் இறக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என சில ஆய்­வா­ளர்கள்
தெரி­வித்­துள்­ளனர்.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போருக்குப் பின் இணைந்­துள்ள இரு அர­சியல் கட்­சிகள் குறித்து புலம்­பெயர் தமிழர் மத்­தியில் பலத்த சந்­தேகம்
தெரி­விக்­கப்­பட்டு வரு­கி­றது. அக்­கட்­சி­யினர் போருக்கு முன் தமிழ்த் தேசி­யத்­திற்கு எதி­ராக அர­சுடன் சேர்ந்து இயங்­கி­ய­வர்கள் என்­பது தமிழ் மக்கள் அனை­வ­ருக்கும் தெரியும்.

அதனால் அவர்­களும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யி­டு­வதை புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்­களில் பலரும் விரும்ப­வில்லை. புலம்­பெயர் ஊட­கங்­க ளில் இடம்­பெறும் உரை­யா­டல்கள் மூலம் இக்­க­ருத்தை அவர்கள் வெளி­யிட்டு வரு­கின்­றனர். அவ்­விரு கட்­சி­யி­னரும் தமது தவறை உணர்ந்து தமிழ்த்­தே­சி­யத்தை ஆத­ரித்து தமிழ் மக்­க­ளுக்கு தொடர்ந்தும் தொண்­டாற்­று­வதன் மூலமே இந்தக் கருத்தை மாற்ற முடியும். அதற்கு முன்­பாக பத­வி­களில் அமர்­வது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல என ஆய்­வா­ளர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

தாய­கத்­தி­லி­ருந்து புலம்­பெயர் ஊட­கங்­க­ளுக்கு வரும் கருத்­துக்­களும் இத­னையே வலி­யு­றுத்தி நிற்­கின்­றன. சர்­வ­தே­சத்­திற்கு தமது நிலை­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தற்­காக தமிழ் மக்கள் அளிக்கும் வாக்­குகள் தமக்­குள்ள ஆத­ர­விற்­கா­கவே கிடைத்­த­தாக இவர்கள் கருதி விடக்­கூ­டாது
என்­ப­த­னையும் அவர்கள் தெரி­வித்து வரு­கின்­றார்கள்.

மக்கள் படும் அவலம் பல­ருக்கும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. புலம்­பெயர் தமிழ் மக்கள் யாழ்ப்­பாண நக­ருக்குச் சென்று விட்டு எல்­லோரும் அங்கு மகிழ்ச்­சி­யுடன் இருப்­ப­தா­கவே தென்­ப­டு­கின்­றார்கள் எனக் குறிப்­பி­டு­கின்­றார்கள். ஆனால் உண்மை நிலைமை அவர்­களும்
அறிந்­துள்­ளார்கள்.

சிங்­கள சேரு­வில மாவட்டம்!

கிழக்கு மாகா­ணத்தில் மேலும் ஒரு சிங்­கள மாவட்டம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லி­ணக்க முயற்­சிக்கு பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக மனித உரிமை அமைப்­புக்கள் குறிப்­பிட்­டுள்­ளன.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 1949 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் 14 சிங்­கள வாக்­கா­ளர்­களே வாக்­க­ளித்­துள்­ளனர். அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள் பல தமிழ், முஸ்லிம் மக்­களின் காணி­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

இரண்டு தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒரு முஸ்லிம் நாடா­ளு­மன்ற உறுப்­ பி­னரும் தெரி­வாகும் திரு­மலை மாவட்­டத்தில் தற்­போது இரண்டு சிங்­கள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தலா ஒவ்­வொரு தமிழ், முஸ்லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தெரி­வா­கி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை இரண்­டாகப் பிரித்து சேரு­வில மாவட்டம் ஒன்றை ஏற்­ப­டுத்த அரசு பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

இதற்­கென இறக்­கக்­கண்டி முதல் குச்­ச­வெ­ளி­வரை 500 ஏக்கர் காணி­க­ளையும் மூதூர் முதல் கிண்­ணியா வரை­யி­லான 300 ஏக்கர் காணி­க­ளையும் அரசு சுவீ­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இவை தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மா­னவை என் றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு சேரு­வில மாவட்டம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தமிழர் தரப்பில் அச்சம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை மாவட்டம் மாத்­தி­ரமே சிங்­கள மாவட்­ட­மாக உள்ள நிலையில் இரண்­டா­வது சிங்­கள மாவட்­ட­மாக சேரு­வில உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதனால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­ லுள்ள தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் பெரி தும் பாதிப்­ப­டை­ய­வுள்­ளனர் என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. புலம்­பெயர் தமிழர் மத்­தியில் இச் செய்தி கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
தமி­ழர்கள் போரின்­போது கொல்­லப்­பட்­டது தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென புலம்­பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்­சி­யா­கக்­கோரி
வரு­கின்­றனர்.

அதற்கு எதி­ராக கடந்த காலங்­களில் சிங்­கள மக்கள் ஊர்­வ­ல­மாக சென்று ஐ.நா. கொழும்பு பணி­ம­னையில் மனுக்­களைச் சமர்ப்­பித்­தனர்.
அவ்­வாறு ஊர்­வ­ல­மாகச் சென்­ற­வர்­களில் வெலி­வே­ரிய பகுதி சிங்­கள மக்­களும் அடங்­குவர். ஆனால் இன்று இரா­ணுவ வன்­மு­றைக்­கெ­தி­ராக
சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென அவர்­களும் குரல் எழுப்ப ஆரம்­பித்­துள்­ளனர்.

இதனை ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தகுந்த ஆதாரங்க ளுடன் சுட்டிக் காட்டி வருகின்றார். புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் இன்று அவரின் உரையை வெளியிட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது அங்குள்ள மக்களைக் காப்பாற்றுமாறு நாம் குரல் எழுப்பினோம். அப்போது எங்கள் மீது எல்லோரும் புலி முத்திரை குத்தினார்கள். இராணுவத்தின் அட்டூழியத்தினால் பல தமி ழர்கள் அங்கு கொல்லப்பட்டதாக நாம் கூறினோம்.
எவரும் நம்பவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு தேவை எனக் கூறினோம். ஆனால் வெலிவேரியவில் இப்போது நடந் துள்ளதும் இராணுவ அட்டூழியமே. எனவே அதற்கும் சர்வதேச விசாரணை தேவை. இதற்கும் சர்வதேச
விசாரணை தேவையென நாம் இப்போதும் தெரிவிக்கின்றோம்.

இவ்வாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளது சிங்களவர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தி வருவதாக சில ஆய்வுக் குறிப்புகளில் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமை யில் இராணுவ விசாரணைக் குழு வொன்று வெலிவேரிய அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றது.

ஆனால், இராணுவத்திற்கு எதிரான புகாரை இராணுவத்தினரே விசாரணை செய்ய முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது. இச்சம்பவத்திற்கென பொது விசாரணை அவசியம் என அது கேட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments