Latest News

August 06, 2013

தமிழர்களுக்காக அன்று குரல் கொடுத்திருந்தால் இன்று தாக்குதல் நடந்திருக்காது sri
by admin - 0

தமி­ழர்கள் என்­ப­தற்­கா­கவே வடக்கில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளையும் மனித உரிமை மீறல்­க­ளையும் தெற்கில் சிங்­கள மக்கள் கண்டுகொள்­ளவோ கண்­டிக்­கவோ இல்லை. அவர்­களும் இலங்­கை­யர்கள் தானே என்று நினைத்து குரல் கொடுத்­தி­ருந்தால் இன்று இரா­ணுவம் சிங்­கள மக்கள் மீது துப்­பாக்கிச்சூடு நடத்­தி­யி­ருக்­காது. தற்­போ­தைய ஆளும் கட்சி இலங்­கையை சர்­வ­தேசம் முன்­னி­லையில் மான­பங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. வெலி­வே­ரிய மக்­களை இரா­ணுவம் தான் சுட்டுக் கொன்­றது என்ற களங்­கத்தை ஒரு போதும் அழிக்க முடி­யாது மாவி­லாறு பிரச்­சினை தொடர்பில் குரல் கொடுத்து யுத்­தத்தை தூண்டி விட்ட அமைச்­சர்­க­ளான விமல் வீர­வன்ச மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் இன்று மெள­ன­மாக இருக்­கின்­றமை வேடிக்­கை­யாக உள்­ளது. இது போன்று குற்­றத்தை ஒப்புக் கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­காது பிரச்­சி­னையை திசை திருப்ப தகு­தி­யற்­ற­வாறு போலி ஆதா­ரங்­களைக் கூறும் இரா­ணுவப் பேச்­சாளர் சீரு­டையை கழட்­டி­விட்டு வீட்டிற்கு செல்­ல­வேண்டும். மறு­புறம் ஜனா­தி­பதி நாட்டு மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும் என்றும் அக்­கட்சி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
ராஜ­கி­ரி­யவில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற விஷேட செய்­தி­யாளர் மாநாட்டின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன்­போது கருத்துத் தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக கூறு­கையில்,
பொது மக்­க­ளுக்கே எதி­ரா­னது தற்­போ­தைய ஆளும் கட்­சியின் ஆட்சி என்­பதை அனைத்து இன மக்­க­ளுக்கும் வெலி­வே­ரிய சம்­பவம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. குடிநீர் கேட்ட மக்­க­ளுக்கு இரா­ணு­வத்தை அனுப்பி பொல்­லு­களால் தாக்கி சுட்­டுக்­கொன்று தனது கொடூர தன்­மையை அரசு வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் வயோ­தி­பர்கள் கர்ப்­பிணி பெண்கள் மற்றும் மாண­வர்கள் என பலரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒரு இளைஞன் உட்­பட இரண்டு மாண­வர்கள் இரா­ணு­வத்தின் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளான நிலையில் பலி­யா­கி­யுள்­ளனர்.
இதில் மிகவும் மோச­மான நிலைமை என்­ன­வென்றால் நேற்று உயர்­தர பரீட்­சைக்கு தோற்றும் மாண­வனும் பலி­யா­னது தான். பொது மக்­களின் அமை­தி­யான ஜன­நா­யக போராட்­டங்­களில் தாக்­கு­தல்­களை நடத்தி வன்­மு­றையை தோற்­று­விக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தனியார் ஓய்­வூ­திய திட்­டத்­திற்கு எதி­ரான போராட்­டத்தின் போதும் ஒருவர் சுட்டுக் கொல்­லப்­பட்டார். சிலா­பத்தில் எரிப்­பொருள் விலை­யேற்­றத்தை கண்­டித்து போராட்டம் நடத்­தி­ய­போதும் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
வெலி­வே­ரிய மக்கள் குடிநீர் பிரச்­சி­னையை சுட்­டிக்­காட்டி பல­முறை போராட்­டத்தில் ஈடு­பட்ட போதிலும் அதனை அரசு கண்டு கொள்­ளாத நிலையில் குறிப்­பிட்ட தினம் இரா­ணு­வத்தை அனுப்பி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்­களை மோச­மாக தாக்கி சுட்டுக் கொண்­டுள்­ளது. அன்று மாவி­லாற்றில் தண்­ணீரை மைய­மாக வைத்துக் குரல் கொடுத்த ஜாதிக ஹெல உறு­மய போன்­ற­வர்கள் தற்­போது மெள­ன­மாக இருப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.
நாட்டில் சட்ட ஆட்சி வீழ்ச்சிக் கண்டு சமூக பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் மேலோங்­கி­யுள்­ளது. சர்­வ­தே­சத்தின் முன் இலங்­கையின் கெள­ரவம் பாதிக்­கப்­பட்டு பெரும் அவ­மா­னமே ஏற்­பட்­டுள்­ளது என்றார்.
நிரோஷன் பாதுக்க இங்கு கருத்து தெரி­வித்த மேல்­மா­காண சபை உறுப்­பினர் நிரோஷன் பாதுக்க, ஹிட்­லரின் கொள்­கைகள் இன்று மஹிந்த சிந்­தனை ஊடாக வெளிப்­பட்டு வரு­கின்­றது. வடக்கில் தமது மக்­க­ளுக்கு எதி­ராக மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­கையில் அதனை தெற்கில் வாழும் சிங்­கள மக்கள் வேடிக்கை பார்த்­தார்கள். அதே போன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் இடம்­பெ­று­கையில் அத­னையும் வேடிக்கை பார்த்­தார்கள் பின்னர் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தாக்­கப்­பட்­ட­போதும் வேடிக்கை பார்த்­தார்கள்
ஆனால் இன்று நிலைமை தலை­கீ­ழாக இரா­ணுவம் சிங்­கள மக்­க­ளையே சுட்டுக் கொல்­கின்ற அள­விற்கு மோச­மா­கி­யுள்­ளது. வெலிவேரிய மக்கள் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்திற்காக இரத்த தானம் செய்தனர். இரவு பகலாக பிரித் ஓதினார்கள் அவற்றையெல்லாம் மறந்து மிகவும் கொடூரமாக அரசாங்கமும் இராணுவமும் நடந்து கொள்கின்றன. எனவே பொது மக்கள் இனியும் பொறுக்கக் கூடாது எதிர்வரும் தேர்தலில் சிறந்த பதிலடியைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக ஆட்சியை மாற்ற வேண்டும் என்றா
« PREV
NEXT »

No comments