தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்வதன் ஊடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யமுடியும். இந்த வெற்றியினை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இளைஞர், யுவதிகளும் ஒன்றிணைந்து உழைக்க முன்வரவேண்டும். அதேபோல் சகல தமிழ் மக்களும் இத்தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:–
வடமாகாண சபைத் தேர்தலின் ஊடாக அமைக்கப்படுகின்ற இப்பகுதிக்கான ஆட்சியே இப்பகுதியின் அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதால் தமிழ் இன விரோதிகளுக்கும் சுயலாப அரசியல் வாதிகளுக்கும் மக்கள் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில் இப்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும்.
இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக சகல இளைஞர்களும் ஒன்றிணைந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வாக்களிக்க முன்வரவேண்டும். அதேபோல் தமிழ் மக்களும் தமது வாக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை வெற்றி பெறச் செய்யவேண்டும்.
இத்தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாகும்.
இதில் வெற்றிபெற்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகப் பல சக்திகள் களத்தில் குதித்துள்ளன. ஆனால் மக்கள் அவர்களுடைய கருத்துக்களுக்குச் செவிசாய்க்காது எமது உரிமைகளை வென்றெடுத்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களிக்கவேண்டும்.
இத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஒன்றுபட்ட சக்தியை வெளிக்காட்டுவதன் ஊடாக எமது உரிமைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்காகவே இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிடுகின்றனர். இதனை நன்கு உணர்ந்தவர்களாக சகல தமிழ் மக்களும் இத்தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றார்
No comments
Post a Comment