Latest News

August 06, 2013

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டும் படையினர்
by admin - 0

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டும் படையினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக வாழிடங்கள் மற்றும் தென்பகுதியில் வாழும் தமிழர்களின் வீடுகளுக்கு அதிரடியாக செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வு படையினர் அவர்களிடம் புலம்பெயர்வாழ் தமிழ் உறவினர்களின் விபரங்களையும் அவர்கள் எவ்வாறு அங்கு சென்றார்கள் என்பதையும்   மற்றும் தப்பி சென்றவர்கள் வீடுகளுக்கு சென்று  அங்கு  உள்ள உறவினர்களை மிரட்டுவதாக நம்பகமான புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.சில வீ டுகளுக்கு புலம்பெயர் தேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய புகைப்படங்களை கொண்டு சென்று மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது 
« PREV
NEXT »

No comments