வட- கிழக்கு இணைந்த தாயகமே தமிழ்பேசும் வரலாற்று தாயகம். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட சூழ்நிலையிலும் எமது தாயகத்தின் விடுதலைக்கான முதல்படியாக இத்தேர்தலை எதிர்கொண்டு வலிதந்த சிங்கள பேரினவாதிகளை இத்தேர்தலில் தோற்க்கடிப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தலைவரும் வடமாகாண சபையின் வேட்பாளரும் ஆகிய எம்.எம்.ரதன் தெரிந்தார்.
நேற்றைய தினம் பண்டாரிக்குளத்தில் தனது தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்சி கொடியினை வவுனியா மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சியின் தலைவர் டேவிட்நாகநாதன் ஏற்றி வைத்தார். அலுவலகத்தை நெடுங்கேணி பிரதேச சபை தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளைச் செயலாளர் வாமதேவன் ஆகியோர் நாடா வெட்டி திறந்து வைத்தனர். பாண்டியன்குளம் பிரதேசசபை உப தலைவர் எஸ்.செந்தூரனும் கலந்து கொண்டார்.
No comments
Post a Comment