ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கைக்கான உள்ளீடுகளை பெற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
வாய்மொழி மூலம் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றை அமர்வுகளில் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உள்ளீடு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் கண்காணித்து அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாய்மொழி மூலம் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றை அமர்வுகளில் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உள்ளீடு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் கண்காணித்து அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment