Latest News

August 13, 2013

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை உரையாற்றவுள்ளார்!
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 24 ஆவது கூட்டத்தொடரில் அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து விசேட உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments