Latest News

August 08, 2013

மேய்ச்சல் தரை நிலங்கள் அப­க­ரிப்பு கால்­நடை வளர்ப்போர் கடும் விசனம்- முல்­லைத்­தீவு
by admin - 0

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள துணுக்காய் பிர­தே­சத்தில் மல்­லா­விக்­குளம் அலை­க­ரை­யி­லி­ருந்து அணிஞ்­சி­யன்­குளம் பிற்­ப­குதி வரை­யான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்­பினை தெங்கு உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்­த­வுள்­ளதால் தமது மேய்ச்சல் தரை நிலங்கள் பறி­போகக் கூடிய அபாயம் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அப்­ப­கு­தியில் கால்­நடை வளர்ப்போர் விசனம் தெரி­விக்­கின்­றனர்.
கடந்த 1998, 1999 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் இதனை மேய்ச்சல் தர­வைக்­காக ஒதுக்­கீடு செய்­யு­மாறு அப்­பி­ர­தேச கால்­நடை வளர்ப்போர் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். அப்­போது இடம்­பெற்ற யுத்த சூழ்­நி­லை­களால் இதனை மேய்ச்சல் தர­வைக்­காக ஒதுக்க முடி­யாமல் இருந்­துள்­ளது. அதன் பின்னர் மீள்­கு­டி­ய­மர்ந்த மக்கள் தொடர்ச்­சி­யா­கவே இதனை தமது கால்­ந­டை­களின் மேய்ச்சல் தரை­யாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.
வன்னிப் பிர­தே­சத்தில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­ள­வான பால் மற்றும் எரு என்­பன பிற இடங்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் கால்­ந­டை­க­ளுக்­கான உணவு போதி­ய­ளவு கிடைக்­க­வில்­லை­யாயின் கால்­ந­டை­களின் உற்­பத்­தியும் பாதிக்­க­ப்ப­டலாம் என இப்­ப­கு­தி­களில் கால்­நடை வளர்ப்போர் தெரி­விக்­கின்­றனர்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சுமார் 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாடுகள் உள்­ளன. இதில் துணுக்காய் பிர­தே­சத்தில் சுமார் 10ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாடுகள் உள்­ளன. ஒரு மாட்­டிற்கு மேய்ச்சல் தரை­யாக சுமார் அரை ஏக்கர் நிலம் தேவைப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் வேறு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இவ் இடத்தைப் பயன்­ப­டுத்­து­வது எமக்கு வேத­னை­ய­ளிக்­கின்­றது எனவும் அப் பகு­தி­களில் கால்­நடை வளர்ப்போர் விசனம் வெளி­யி­டு­கின்­றனர்.
இதனை விட இப் பகு­தியில் தெங்குப் பொருட்கள் உற்­பத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்டு துப்­பு­ரவு வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவ் விடயம் தொடர்­பாக மக்­க­ளுக்கு எது­வித அறி­வித்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை. எமது பிர­தே­சத்தில் எமது தேவை­களைக் கருத்­திற்­கொள்­ளாமல் எமக்குப் பாதிப்­புக்கள் ஏற்­ப­டக்­கூ­டிய வகை­யி­லேயே அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் நடை­பெ­று­கின்­றன. இது எவ்­வ­கையில் நியா­ய­மா­ன­தாக அமையும் எனவும் இப் பகுதி மக்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.
ஆயிரம் ஏக்­கரில் ஏற்­க­னவே சுமார் 100 ஏக்கர் நிலப்­ப­ரப்பு அர­சாங்க கால்­நடை பண்­ணைக்கும், சேவா­லங்கா கால்­நடை இன­வி­ருத்தி நிறு­வ­னத்­திற்கும் வழங்­கப்­பட்­டுள்­ளன.
எமது பகு­திக்குள் சில அபி­வி­ருத்தித் திட்­டங்கள் உரு­வாக்கப் போகின்றோம் என உள் நுழைந்த தென்­ப­கு­தி­யினர் இங்கு குடி­யே­று­கின்­றார்­களா என்ற அச்­சமும் தமக்கு எழுந்­தள்­ள­தாக இப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர். எனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இதனைக் கருத்­திற்­கொண்டு இப்­ப­கு­தியில் கால்­ந­டை­வ­ளர்ப்­போரின் தேவை­களை உணர்ந்­த­வர்­க­ளாக மேய்ச்சற் தரை­வைக்­காக ஒதுக்­கிய நிலப்­ப­கு­தியை வேறு­தே­வை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தாது தடை­செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
« PREV
NEXT »

No comments