Latest News

August 08, 2013

மட்டக்களப்பின் கரையோரத்தில் புலிகளின் படகு ?
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த விசாரணை ஒன்றை நடத்திவருகிறார்கள். இதேவேளை மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் அவர்கள் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக, இப் பகுதியில் அதிவேகப் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் அதில் உள்ள இயந்திரம் களற்றப்பட்ட நிலையில் அது காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் இத்தேடுதல் நடவடிக்கையை மூடி மறைக்க , சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இராணுவத்தினர் தெரிவிப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள், நடமாடுபவர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் இராணுவம் பலரை விசாரித்து வருகிறது.
« PREV
NEXT »

No comments