Latest News

August 08, 2013

தமி­ழகம் முழு­வதும் இன்று `டெசோ' ஆர்ப்பாட்டம்
by admin - 0

13ஆம் திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்ற வேண்டும், இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய மாநாட்டை இந்­தியா புறக்­க­ணிக்க வேண்டும் என்ற ­`டெசோ’ மாநாட்டின் தீர்­மா­னங்­களை வலி­யு­றுத்தி தி.மு.க.வினர் தமி­ழகம் முழு­வதும் இன்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.
இந்­நி­லையில், இந்த ஆர்ப்­பாட்­டத்தை வெற்­றி­க­ர­மாக்கித் தர­வேண்டும் என தி.மு.க.தலைவர் கரு­ணா­நிதி அனைவரையும் கோரி­யுள்ளார்.

இது­கு­றித்து அவர் நேற்று வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கை யில்,
``13 ஆம் திருத்தம் இல ங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்கு முழு அர­சியல் தீர்­வாக அமை­யாது என்­பதும், இலங்கை உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளிலும் வாழும் இலங்கைத் தமி­ழர்­க­ளி­டையே பொது வாக்­கெ­டுப்பு நடத்தி அவர்­க­ளு­டைய கருத்­தினைக் கேட்டுத் தீர்வு காண்­பதே தமி­ழர்­களின் நல­னுக்கு உகந்த தீர்­வாக இருக்கும் என்றும் `டெசோ’ வலி­யு­றுத்­து­கி­றது.

மேலும், இலங்­கையில் இடம்­பெ­ற­வு ள்ள பொது­ந­ல­வாய மாநாட்டை இந்­தியா புறக்­க­ணிக்க வேண்டும், தமி­ழக மீனவர் பிரச்­சி­னைக்கு சிறந்த நட­வ­டிக்­கையை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும், இலங்­கையில் தமிழர் வாழும் பகு­தி­களில் சிங்­க­ள­வர்­களைக் குடி­யேற்­று­வ­தையும் பெயர் பல­கை­கள் தமி­ழி­லி­ருந்து சிங்­க­ளத்­திற்கு மாற்­றப்­ப­டு­வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் சமீ­பத்தில் இடம்­பெற்­றி­ருந்த டெசோ மாநாட்டில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.
அந்த 4 தீர்­மா­னங்­களை வலி­யு­றுத்­தித் தான் நாளைய தினம் (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments