Latest News

August 23, 2013

போராட்டம் வெற்றி பிரித்தானியாவில் Madras Cafe திரையிடப்படாது
by admin - 0

தமிழர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக
சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி “மெட்ராஸ் கஃபே” என்கிற திரைப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க
சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது.இப்
படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர். இதேவேளையில்
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் எதிர்வரும் 23.08.2013
அன்று திரையிட திட்டமிட்டு இருந்தார்கள் பிரித்தானியா வாழ் தமிழர்களின் முற்றுகை போராட்டத்தை அடுத்து Madras  Cafe திரையிடுவதில்லை என்று சினி வேர்ல்ட் முடிவு செய்துள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெருந்திரளான மக்கள் பங்கு பற்றி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் இதன் போது பிரித்தானியா வாழ் தமிழக உறவுகள் அதிகளவில் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments