இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
பொது பலசேனாவின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருகின்றன. இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம். முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும். பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை. பெளத்த குடும்பத்தில் கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றார்.
எழுத்தாளர் சமில லியனகே
இங்கு எழுத்தாளர் சமில லியனகே உரையாற்றுகையில், குருவைக்கல்லு என்ற தமிழ்ப்பெயரே இன்று குருணாகல் என்று திரிபடைந்துள்ளது. குருணாகல் அத்துகல்புர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். 2012 கணக்கெடுப்பின்படி இலங்கையில் எட்டு மாவட்டங்களில் பெளத்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இது அதிகமாக உள்ளது. சிங்களவர்களை அழிக்க வேண்டுமானால் சிங்களத் தன்மையை இல்லாமற் செய்ய வேண்டும். அதையே இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. இன்று தேசியக் கொடிக்கு மதிப்புக் கொடுக்காத இளைஞர் சமுதாயமொன்று உருவாகியுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் பெளத்த பாரம்பரியத்தையும் பழமையையும் ஏனையவருக்கு விற்று வருகின்றனர்.
இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது வேடர் பரம்பரையினரின் இரத்த மாதிரிகளை எடுத்து வெளிநாட்டு மருந்துக் கம்பனிகளுக்கு விற்று வருகின்றன. பால் தரும் பசுக்களை இறைச்சிக்கடைகளுக்கு விற்று நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்து வருகின்றனர்.
இந்தியா அல்ல யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய நாடு. எமது இராணுவ வீரர்களின் முயற்சியே வெற்றி பெற்றுத் தந்தது. யுத்தப் பிரதேசத்தின் 39 அரச சார்பற்ற அலுவலகங்களில் நவீன பங்கர்கள் காணப்பட்டன. இவர்களே இன்று ஜெனீவா சென்று எம்மைத் தூற்றுகின்றனர். பாதுகாப்புச் செயலாளரைக் கொலை செய்ய இவர்களே வடக்கிலிருந்து குண்டை தங்கள் வாகனத்தில் கொண்டு வந்தனர்.
பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளார். இவரின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை. இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விட வேண்டும் என்றார்.
அத்தே ஞான சாரதேரர்
இக் கூட்டத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றுகையில்
சமாதானத்தை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு ஆதரவை நல்குகின்றனர். அரசியல்வாதிகளும் கடும் போக்காளர்களும் சில ஊடகங்களுடன் இணைந்து எம்மைத் தூற்றி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றனர். கிறிஸ்தவ முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை ஆத்திரமூட்டி வருகின்றன. சிலர் எம்மை அரசாங்கத்தின் அடிவருடிகள் என கூறி வருகின்றனர். எப்படி இருந்த போதிலும் எமது செயற்பாடுகளை தடுக்க முடியாது.
இலங்கையில் இனி விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புதிதாக அமைக்கப்படவேண்டிய தேவையில்லை. இதற்கான சட்டமொன்றை ஜனாதிபதி கொண்டு வர வேண்டும்.
பெளத்தர்களின் தேவைகளை நிறைவேற்ற இன்று ஒருவருமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு அனைத்தையும் வழங்க பலரும் உள்ளனர். முஸ்லிம்களால் எமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் தொடர்பாக அனைத்து பெளத்த அமைப்புக்களும் கலந்து உரையாடி அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் எமக்கெதிராகப் பேசும் விடயங்கள் வெளிவருவதில்லை. பிக்குகள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை. நாம் புத்தரின் சீடர்களேயன்றி ஏனையவர்களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றி விட்டனர். இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறுபவர்களுக்கே சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும். இலங்கையில் போதைவஸ்து பெருக்கத்திற்கு அரசியல்வாதிகள் காரணம். போதைவஸ்து வியாபாரிகளை அவர்களே பாதுகாக்கின்றனர்.
இலங்கையில் இன்று தெளபீக் ஜமாத்தினரால் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள இவர்கள் இந்தியாவில் தமிழ் நாட்டிலும் காலூன்றி உள்ளனர். உலகில் இவர்களால் 52 நாடுகளில் பிரச்சினை கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை பெருநாளைக் கொண்டாடும்படி கூறிய போது கிழக்கில் வியாழக்கிழமை கொண்டாடிய குழுவினர் இவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக இவர்களின் செயற்பாடுகளால் சிங்களவர்களும் தமிழர்களுமே பெரிதும் பாதிக்கப்படுவர்.
முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால் அரபுச்சட்டங்களை இங்கு கொண்டு வர முடியாது. பெளத்த மதம் தொடர்பான இழிவான துண்டுப்பிரசுரங்களை தெளபீக் ஜமாத்தினர் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புப் பிரிவினர் இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்துவோம்.
பெளத்த பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்று பிக்குவாக துறவறம் மேற்கொள்ள வருபவர்கள் குறைவு. ஆட்களைத் தேடிக்கண்டு பிடிக்கவும் கஷ்டமாக உள்ளது. பிக்குகள் முன் வந்து பெளத்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
பொது பலசேனாவின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருகின்றன. இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம். முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும். பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை. பெளத்த குடும்பத்தில் கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றார்.
எழுத்தாளர் சமில லியனகே
இங்கு எழுத்தாளர் சமில லியனகே உரையாற்றுகையில், குருவைக்கல்லு என்ற தமிழ்ப்பெயரே இன்று குருணாகல் என்று திரிபடைந்துள்ளது. குருணாகல் அத்துகல்புர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். 2012 கணக்கெடுப்பின்படி இலங்கையில் எட்டு மாவட்டங்களில் பெளத்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இது அதிகமாக உள்ளது. சிங்களவர்களை அழிக்க வேண்டுமானால் சிங்களத் தன்மையை இல்லாமற் செய்ய வேண்டும். அதையே இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. இன்று தேசியக் கொடிக்கு மதிப்புக் கொடுக்காத இளைஞர் சமுதாயமொன்று உருவாகியுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் பெளத்த பாரம்பரியத்தையும் பழமையையும் ஏனையவருக்கு விற்று வருகின்றனர்.
இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது வேடர் பரம்பரையினரின் இரத்த மாதிரிகளை எடுத்து வெளிநாட்டு மருந்துக் கம்பனிகளுக்கு விற்று வருகின்றன. பால் தரும் பசுக்களை இறைச்சிக்கடைகளுக்கு விற்று நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்து வருகின்றனர்.
இந்தியா அல்ல யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய நாடு. எமது இராணுவ வீரர்களின் முயற்சியே வெற்றி பெற்றுத் தந்தது. யுத்தப் பிரதேசத்தின் 39 அரச சார்பற்ற அலுவலகங்களில் நவீன பங்கர்கள் காணப்பட்டன. இவர்களே இன்று ஜெனீவா சென்று எம்மைத் தூற்றுகின்றனர். பாதுகாப்புச் செயலாளரைக் கொலை செய்ய இவர்களே வடக்கிலிருந்து குண்டை தங்கள் வாகனத்தில் கொண்டு வந்தனர்.
பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளார். இவரின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை. இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விட வேண்டும் என்றார்.
அத்தே ஞான சாரதேரர்
இக் கூட்டத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றுகையில்
சமாதானத்தை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு ஆதரவை நல்குகின்றனர். அரசியல்வாதிகளும் கடும் போக்காளர்களும் சில ஊடகங்களுடன் இணைந்து எம்மைத் தூற்றி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றனர். கிறிஸ்தவ முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை ஆத்திரமூட்டி வருகின்றன. சிலர் எம்மை அரசாங்கத்தின் அடிவருடிகள் என கூறி வருகின்றனர். எப்படி இருந்த போதிலும் எமது செயற்பாடுகளை தடுக்க முடியாது.
இலங்கையில் இனி விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புதிதாக அமைக்கப்படவேண்டிய தேவையில்லை. இதற்கான சட்டமொன்றை ஜனாதிபதி கொண்டு வர வேண்டும்.
பெளத்தர்களின் தேவைகளை நிறைவேற்ற இன்று ஒருவருமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு அனைத்தையும் வழங்க பலரும் உள்ளனர். முஸ்லிம்களால் எமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் தொடர்பாக அனைத்து பெளத்த அமைப்புக்களும் கலந்து உரையாடி அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் எமக்கெதிராகப் பேசும் விடயங்கள் வெளிவருவதில்லை. பிக்குகள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை. நாம் புத்தரின் சீடர்களேயன்றி ஏனையவர்களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றி விட்டனர். இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறுபவர்களுக்கே சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும். இலங்கையில் போதைவஸ்து பெருக்கத்திற்கு அரசியல்வாதிகள் காரணம். போதைவஸ்து வியாபாரிகளை அவர்களே பாதுகாக்கின்றனர்.
இலங்கையில் இன்று தெளபீக் ஜமாத்தினரால் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள இவர்கள் இந்தியாவில் தமிழ் நாட்டிலும் காலூன்றி உள்ளனர். உலகில் இவர்களால் 52 நாடுகளில் பிரச்சினை கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை பெருநாளைக் கொண்டாடும்படி கூறிய போது கிழக்கில் வியாழக்கிழமை கொண்டாடிய குழுவினர் இவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக இவர்களின் செயற்பாடுகளால் சிங்களவர்களும் தமிழர்களுமே பெரிதும் பாதிக்கப்படுவர்.
முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால் அரபுச்சட்டங்களை இங்கு கொண்டு வர முடியாது. பெளத்த மதம் தொடர்பான இழிவான துண்டுப்பிரசுரங்களை தெளபீக் ஜமாத்தினர் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புப் பிரிவினர் இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்துவோம்.
பெளத்த பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்று பிக்குவாக துறவறம் மேற்கொள்ள வருபவர்கள் குறைவு. ஆட்களைத் தேடிக்கண்டு பிடிக்கவும் கஷ்டமாக உள்ளது. பிக்குகள் முன் வந்து பெளத்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
No comments
Post a Comment