Latest News

August 03, 2013

இராணுவத்தால் கொல்லப்பட்ட மாணவன் இவர்தான்
by admin - 0

 குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர்
இனங்காணப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா ஜயவர்தன அடையாளங்
காட்டியுள்ளார். குறித்த இளைஞரின் பெயர் அகில தினேஷ் ஜயவர்தன. 17 வயதான அவர் யக்கல சந்ரஜோதி வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்விகற்று வந்தவர். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில்
தொழில்புரியும் தனது தாயாரை சந்திப்பதற்காக அங்கு சென்றுகொண்டிருந்ததாகவும் அதன்
போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments