Latest News

August 03, 2013

தமிழ்மொழியில் பற்றுக்கொண்டமையினால் நான் தேசிய போட்டியில் சாதித்துள்ளேன்
by admin - 0

எனது விடா­மு­யற்­சியும் பெற்­றோரின் ஊக்­கமும் ஆசி­ரி­யர்­களின் வழி­காட்­டலின் ஊடா­க­வுமே என்னால் தேசிய மட்­டத்தில் சாதிக்­க­மு­டிந்­தது.
நான் தமிழ் மொழியில் மிகுந்த பற்­றுக்­கொண்­ட­மையால் கற்ற பாடங்­க­ளையும் புதிய விட­யங்­க­ளையும் தேடிக் கற்­றுக்­கொண்­ட­மை­யி­னா­லேயே என்னைத் தேசிய மட்டம் வரை கொண்டு செல்ல முடிந்­தது என தேசிய மட்­டத்தில் தமிழ் மொழிக் கட்­டுரைப் போட்­டி­யில் முதலாம் இடத்­தினைப் பெற்­றுக்­கொண்ட யாழ். பண்­ணாகம் மெய்­கண்டான் மகா வித்­தி­யா­ல­யத்தில் தரம் ௫ இல் கல்வி கற்கும் மாண­வி­யான கலை­ய­ழகன் வேல்­விழி தெரி­வித்தார்.
தேசிய மட்­டத்தில் தடம் பதித்த க. வேல்­வி­ழிக்கு பண்­ணாகம் மாதர் கிராம அபி­வி­ருத்திச் சங்க மண்­ட­பத்தில் அண்­மை யில் பாரா ட்டு விழா நடத்­தப்­பட்­டது. இந்த நிகழ்­வின்­போதே மாணவி இவ்­வாறு தெரி­வித்தார்.இம் மாணவி தனது அனு­பவம் தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்,
நான் கற்ற பாடங்­களைத் திரும்­பத் ­தி­ரு ம்ப கற்று இல­கு­ப­டுத்திக் கொண்டேன். என்­னைப்போல் ஏனைய மாண­வர்­களும் பின்­பற்­றுதல் வேண்டும்.
ஆசி­ரி­யர்­களின் வழி­காட்­டல்­களைப் பின்­பற்­றுதல், தெரி­யா­த­வற்றைக் கேட்டுக் கற்­றுக்­கொள்ளல் என்­பன மாண­வர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­தாகும். நான் இரவு வேளை­க­ளிலும் கூட ஆசி­ரி­யரின் வீட்­டுக்குச் சென்று கல்வி கற்ற பின்னர் அப்பா என்னை வீட்­டி ற்கு அழைத்து வருவார்.
எந்­த­வே­ளை­யிலும் எனக்கு ஊக்­கத்தை அளித்­தவர் எனது ஆசி­ரியர் புஷ்­ப­ராணி சுகுமார். எனக்­காக நிறைய புதிய விட­யங்­க ளைத் தேடிக்­கற்றுக் கொடுப்பார். அப்­ப­டி­யொரு ஆசி­ரியை எனக்குக் கிடைத்­த­மையே என்னை சாத­னையின் முதல் படிக்கு ஏற­வைத்­தது.
எனது பெற்­றோ ரும் சகோ­த­ரர்­க ளும் ஊக்கம் கொடுத்து எனக்கு தேசிய மட்டம் செல்­ல­வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்­டார்கள். அதற்­க­மை­யவே நான் எனது பய­ணத்தை ஆரம்­பித்தேன்.
என்னால் வலய, கோட்ட, மாவட்ட, மாகாண, தேசி­ய­மட்டப் போட்­டி­களில் நடை­பெற்ற தமிழ் மொழிக் கட்­டுரைப் போட்­டியில் வெற்­றி­பெற முடிந்­தது. இந்த ஐந்து மட்­டங்­களில் நடை­பெற்ற போட்­டி­க ளில் வெற்­றி­யீட்­டு­வ­தற்கு எனக்கு தன்­னம்­பி க்கை கை கொடுத்­தது.
ஒரு மட்­டத்தில் வெற்றி பெற்­ற­வுடன் ஏனைய மட்­டங்­க­ளிலும் நான் போட்­டி­யிட வேண்­டு­மென்ற ஆர்­வத்தைத் தூண்­டி­யது.
தேசிய மட்­டத்தில் நான் சாதித்­த­மையை ஒரு அனு­ப­வ­மாக வைத்­துக்­கொண்டு கலந்­து­ கொள்ளும் ஏனைய போட்­டி­க­ளிலும் என் னால் சாதிக்க முடியும் என்றார்.
இப் பாராட்டு நிகழ்வில் ஓய்வு நிலை திட்­ட­மிடல் பணிப்­பாளர் ஆ.கதி­ரை­ம­லை­நாதன், வட­மா­காண உதவிக் கல்விப் பணிப்­பாளர் ச.கைலா­ய­நாதன், யாழ்.பல்­க­லைக்­க­ழ­க விரி­வு­ரை­யாளர் திரு­மதி.நாச்­சியார் செல் ­வ­நா­யகம், பண்­ணாகம் மெய்­கண்டான் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி புஷ்பராணி சுகுமார் ஆகி யோர் கலந்துகொண்டனர்
« PREV
NEXT »

No comments