அரசாங்கமே சர்வதேசம் இலங்கையில் தலையிடுவதற்காக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கில் போலவே அரசாங்கம் தெற்கிலும் கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் அரசாங்கமே சர்வதேசம் நாட்டில் தலையிடுவதற்கு வழிவகுக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கமே துரும்புச் சீட்டை வழங்குகிறது என்றார். வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment