Latest News

August 07, 2013

இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இராணுவத்தினர் மோதல்
by admin - 0

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான்
இராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில்
இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில்
இரு இராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 2  வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது. தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
« PREV
NEXT »

No comments