மன்னார் விடத்தல் தீவைச்
சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை காணாமல்போயுள்ளதாக
மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த
ஏ.சுகன்னியா (வயது-17) என்ற
யுவதியே காணாமல் போயுள்ளார். தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில்
வசித்து வந்த யுவதி, தனது பெற்றோரை பார்ப்பாற்காக நேற்று முன்தினம் மன்னார்
பேருந்து நிலையத்திற்கு உறவினர் ஒருவருடன் வந்துள்ளார். அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியம் 1 மணியளவில் குறித்த யுவதி நின்ற போது, அவரை அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும்
வந்தபோது யுவதியை காணவில்லை எனத்
தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, எங்கு தேடியும் யுவதியைக்
காணாத நிலையில், பெற்றோர் மற்றும்
உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த யுவதியும்,அவருடய பெற்றோர்களும்
இந்தியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும்
இலங்கை வந்து விடத்தல் தீவில்
வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பொலிஸார் இதுதொடர்பான
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment