Latest News

August 20, 2013

கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்கவில்லை! அங்கஜன் மறுப்பு!
by admin - 0

வட மாகண சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பளராகவுள்ள ஒருவரால் தான் மீதான மக்கள் கவனத்தை திருப்பி அதனுடாக பிரபல்யத்தை பெறும் நோக்கோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதே சம்பவமே இதுவாகும்.
யாழ் நகர சிற்றூர்தி தரிப்பிடத்தில் அருகில் உள்ள எனது வியாபார நிலையத்திற்கு பிற்பகல் 3 மணியளவில் வருகை தந்த மேற்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராஜாவும் அவருடன் வந்த சில குண்டர்களும் முகாமையாளரிடம் என்னையும் எனது தந்தையாரையும் கேட்டு உரத்த குரலவில் சத்தமிட்டானர்.
தொடர்ந்து எனது நிறுவனத்தையும் அதன் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிறுவனத்துக்கு சொந்தமான எனது வாகனத்தையும் படம் பிடிக்க முற்பட்ட வேளை அதனை தடுக்க சென்ற எமது நிறுவன முகமையாளரிடம் தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்யும் உரிமை தமக்கே உண்டு எனவும் கொழும்பில் இருந்து வந்து இங்கு வந்து எவரும் அரசியல் செய்ய தேவையில்லை என்று கூறியதுடன் எனது மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜனமா செய்ய வேண்டும் அல்லாவிட்டால எனது உயிருக்கு எனது தந்தையின் உயிருக்கும் ஆபத்து எற்படும் என்பதையும் வலியுறுத்தி சத்தமிட்டு கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி எனக்கு சொந்தமான வாகனத்தையும் சேதப்படுத்தியுடன் எமது ஆதரவாளர்களுடன் வாய்ர்த்தக்கத்திலும் ஈடுபட்டதுடன் தன்னுடன் வந்த குண்டர்களை கொண்டு தனது வாகனத்தையும் தாக்கியுள்ளார்.
இம்முறை தேர்தலில் புதுமுக வேட்பளராகவுள்ள, மக்கள் அறிமுகமற்றவரான மேற்படி வேட்பாளர் மக்களிடையேயான தனது அனுதாப அரசியலை பெறும் நோக்கோடு செய்யப்பட்ட ஒரு செயற்படே இதுவாகும். மேலும் எமது வியாபர நிறுவனத்திற்கு வந்து எம்மை வலிந்து சண்டைக்கு இழுப்பதன் மூலம் தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக என் மீதான அவதூறையும் தனக்கான அனுதாபத்தையும் தேடிக் கொள்வதே அவரின் குறியாக காணப்பட்டது.
எனவே இவ்வறானவர்களை மக்கள் இணங்கண்டு கொள்ள வேண்டும் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இது தொடர்பாக யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments