Latest News

August 08, 2013

வெலி­வே­ரிய தாக்­குதல் சம்­பவம் - 90 துப்­பாக்­கிகள் மீட்பு
by admin - 0

வெலி­வே­ரிய பிர­தே­சத்தில் குடிநீர் கோரி ஆர்ப்­பாட்டம் செய்த பொது மக்கள் மீது இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 90 துப்­பாக்­கி­களை கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரிவு கைப்­பற்­றி­யுள்­ளது.

ரீ. 56 ரக துப்­பாக்­கி­களே வெலி­வே­ரிய சம்­பவம் தொடர்பில் விசேட விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு பொறுப்­பான அதி­காரி டீ. ஆர். எல். ரண­வீர தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இர­சா­யன பகுப்­பாய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவே குறித்த ஆயு­தங்கள் இவ்­வாறு மீட்­கப்­பட்டு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் கேச­ரிக்கு தகவல் தரு­கையில், வெலி­வே­ரிய துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் பொது­மக்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­க­ளிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­துள்­ள­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் தெரி­வித்­தது.

அத்­துடன் சம்­பவ தினம் குறித்த பிர­தே­சத்தில் கட­மையில் ஈடுப்­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னரின் துப்­பாக்­கிகள் அனைத்­தையும் இர­சா­யன பகுப்­பாய்வு பரி­சோ­த­னை­க­ளுக்­காக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­பேற்­றுள்­ள­தாக சுட்டிக் காட்டிய பொலிஸ் ஊடகப் பிரிவு, இதுவரை இராணுவத் தரப்பில் எவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments