Latest News

August 13, 2013

தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்
by admin - 0

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 100,000க்கு மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் அதிகமான 45,969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுமார் 39,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கண்டி மாவட்டத்திலும் 11,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் கிடைக்க பெற்றுள்ளது தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
12,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது என தேர்தல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments