Latest News

July 28, 2013

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சீராஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்- இளைஞன் தீக்குளிக்க முயற்சி
by admin - 0

தயா மாஸ்டர் மற்றும் எம்.எம். சிராஸ் ஆகியோருக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட வாய்ப்பு வழங்காததை எதிர்த்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எம்.எம். சீராஸின் ஆதரவாளர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று சனிக்கிழமை இரவு வெளியான நிலையில் அதில் சீராஸ் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் , வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்திருந்தார்.
வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முக தேர்விலும் அவர் கலந்து கொண்டனர்.
தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை. இதனையடுத்தே ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வார்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
இளைஞன் தீக்குளிக்க முயற்சி
சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தின்போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞனொருவர், “சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்” என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞனை தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த இளைஞனே இந்த மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments