மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களின் போது இணைத்துக் கொள்ளப்படவுள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கணிப்பீடு ஒன்று நடத்தப்பபடவுள்ளது.
இதன்படி, அரசாங்க அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் அனைத்து அமைச்சர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.
அதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயம் அல்லது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அறிக்கைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு உறுப்பினர்கள் தங்கிள்ன வானங்களை இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்று கெபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுனர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment