பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பல நபர்களிடம் கப்பம் பெற்று வந்த குழுவொன்றை காலி வந்துரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
7 பேர் கொண்ட இந்த குழுவில், களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
சிறைச்சாலையில் இருந்து, பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் எனக் கூறி, பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவில் உள்ள நபர்களில் பெயர்களை கூறி, அவர்களின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து, தம்மை தொடர்பு கொள்ளுமாறு சந்தேக நபர்கள் உத்தரவிட்டு வந்துள்ளனர்.
இதனை நம்பிய பல பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் குறிப்பிடம் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அதனை அவர்களிடம் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் வழங்கிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தம்மை பொலிஸ் உயர் அதிகாரிகள் என்று கூறி பணத்தை வழங்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் ஒருவர் 2009 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளையடித்த குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் எனவும் இவர், சிறையில் இருந்தவாறே கப்பம் பெறும் குற்றச் செயலை வழி நடத்தி வந்துள்ளார்.
கடந்த 7ம் திகதி விடுதலையான அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
No comments
Post a Comment