Latest News

July 28, 2013

எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரனும் கூட்டமைப்பில் போட்டி
by admin - 0

வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
வவுனியா, மன்னார் ஆகிய
ஐந்து மாவட்டங்களினதும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல்,
பெரும்பாலும் நாளை அந்தந்த மாவட்டச்
செயலகங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று, கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் நிறுத்தப்படவுள்ளதாக
தெரியவருகிறது. அத்துடன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்  பொறுப்பாளராக இருந்தவரும், 2009இல்
போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம்
சரணடைந்த பின்னர் காணாமற் போனவருமான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன்,எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்
பட்டியல்களில் இடம்பெறவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தன்,
வடக்கு மாகாணசபைக்கான
முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்
ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்
பட்டியல் தயாரிப்பு, தேர்தல் பரப்புரைகளுக்கான முன்னேற்பாடுகளில்
தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்துக்கான வேட்பாளர்
பட்டியலை முதன்மை வேட்பாளர் சி.வி.
விக்னேஸ்வரனே கையாளிப்பார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள்
தெரிவித்தன.
« PREV
NEXT »

No comments