Latest News

July 28, 2013

கொட்டும் மழையில் மாணவிகள் ஊர்வலம்: பாதுகாப்பாக இருந்து பார்வையிட்ட கல்வியமைச்சர்
by admin - 0

கொட்டும் மழையிலும் மாணவிகளின் ஊர்வலத்தை நடத்தியமை தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவாத்தனவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் எசல ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கடும் மழை பெய்தபோதும் சுமார் 1600 பாடசாலை மாணவிகளின் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதனை பாதுகாப்பான கூடாரங்களில் இருந்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் அவருடைய அதிகாரிகளும் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் பள்ளிமாணவிகளின் ஊர்வலத்தை கொட்டும் மழையிலும் நடத்துவதற்கு அமைச்சர் ஏன் அனுமதித்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments