இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பதவி வகிக்கும் அதிகாரிகளை கொலை செய்ய ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் இவ்வாறு, ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளை கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் வெலோ சுதா என்ற பிரபல பாதாள உலக்க குழு உறுப்பினரே ஒப்பந்தத் வழங்கியுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment