Latest News

July 28, 2013

வடக்கில் அரசுக்கும் த.தே.கூட்டமைப்புக்குமிடையில் கடும் போட்டி நிலவும்: டிலான் பெரேரா
by admin - 0

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வெற்றி பெறும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் போட்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை தம் பக்கம் இழுத்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கில் ஏற்படும் தோல்வியை மறைப்பதற்காகவே அரசாங்கம், பதவிக்காலம் முடிவதற்குள் வடமேல், மத்திய மாகாணங்களை கலைத்து தேர்தல் நடத்துவதாகவும் அந்த கட்சி கூறியுள்ளது.
« PREV
NEXT »

No comments