தென் மாகாண முதலமைச்சர் பதவியானது, நாயின் பின்புறமுள்ள ரோமம் போன்றதாகும். அதற்கு பெறுமதியில்லை அதேபோல முதலமைச்சர் பதவிக்கும் பெறுமதியில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவை விட்டுவிட்டு செல்லமாட்டேன் என இரத்தத்தில் அன்று நான் செய்த சத்தியத்திலிருந்து என்றுமே மாறமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் இணைவீர்களா? இல்லையா? என்று என்னிடம் பலரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எனக்கு கழிவுகளை சாப்பிடும் பழக்கமில்லை அவ்வாறான பிரச்சினையும் எனக்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைகளை முன்னெடுப்பதற்கான ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களை அரசாங்கம் வாடகைக்கு அமர்த்துகின்றது. அதற்காக செல்கின்றவர்களின் இதய சாட்சி தொடர்பில் தனக்கு பிரச்சினையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment