Latest News

July 23, 2013

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றியத்தை கூட்டுங்கள்: பௌஸிக்கு ஹசன் அலி கடிதம்
by admin - 0


முஸ்லிம் சமூ­கத்தின் மத, கலா­சார விழு­மி­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டு வரும் நாக­ரி­க­மற்ற கீழ்த்­த­ர­மான பிர­சா­ரங்­களும் தாக்­கு­தல்­களும் எல்­லை­மீறி செல்­கின்­றன. இதனால் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாம் கட்சி வேறு­பா­டு­களை ஒதுக்­கி­விட்டு ஒன்­று­கூடி கலந்­தா­லோ­சிக்க வேண்டும். இதனால் தங்­க­ளது தலை­மையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றியம் உட­ன­டி­யாக கூட்­டப்­பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹசன் அலி சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி­யிடம் கோரி­யுள்ளார்.

இது­கு­றித்து அவர் அமைச்சர் பௌஸிக்கு நேற்று கடி­த­மொன்­றி­னையும் அனுப்­பி­வைத்­துள்ளார். அதன் விபரம் வரு­மாறு:

அண்­மைக்­கா­ல­மாக நமது முஸ்லிம் சமூ­கத்தின் மத, கலா­சார விழு­மி­யங்­கள்­ மீது தொடந்­தேர்ச்­சி­யாக கட்­ட­விழ்த்து விடப்­பட்டு வரும் நாக­ரி­க­மற்ற கீழ்த்­த­ர­மான பிர­சா­ரங்­களும் தாக்­கு­தல்­களும் எல்­லை­மீறி கட்­டுக்­க­டங்­காத ஒரு நிலை­மை­யினை அடைந்­து­விட்­ட­தாக பலர் அச்­ச­முற்­றுள்­ளனர்.
நமது சமூ­கத்­தினர் இது­வரை பொறு­மை­யுடன் பேணிப் ­பா­து­காத்து வரும் கட்­டுக்­கோப்­பினை தகர்த்­தெ­றியும் உள்­நோக்­குடன் நமது உணர்­வ­லை­களைத் தூண்­டும்­வ­கையில் பல­ சம்­ப­வங்கள் அவ்­வப்­போது திட்­ட­மிட்­ட­வாறு அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

எப்­ப­டி­யா­வது நமது சமூகத்தை இன்­னு­மொரு இனக்­க­ல­வ­ரத்­துக்குள் வலிந்து மாட்­டி­வி­ட­வேண்டும் என ஒரு­சாரார் பகீ­ர­தப்­பி­ர­யத்­தனம் எடுத்து வரும் அதே­வேளை மறு­சாரார் எதுவும் நடக்­கா­தது போல் கடைக்கண் பார்­வை­யுடன் பாசாங்கு செய்­து­வரும் நிலை­மை­யினை தொட­ர­வி­டு­வ­தா­னது ஆபத்­தான ஒரு சூழ­லுக்குள் நமது சமூ­கத்தை இட்­டுச்­செல்லும் என பலரும் எச்­ச­ரிக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாம் நமது கட்சி வேறு­பா­டு­களை ஒதுக்­கி­வைத்­து­விட்டு ஒன்­று­கூடி கலந்­தா­லோ­சித்து இந்­நாட்டில் வாழும் சகல சமூ­கங்­களும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய சூழலை வலுக்­கட்­டா­ய­மாக பாது­காக்­க­வேண்­டி­யுள்­ளது.
எனவே, தங்­க­ளது தலை­மையில் நமது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றியம் உட­ன­டி­யாக கூட்­டப்­ப­ட­வேண்டும் என தங்­களை பணி­வன்­புடன் வேண்­டிக்­கொள்­கின்றேன்.

மஹி­யங்­கனை மஸ்­ஜிதுல் அரபா பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு தற்­போது மூடப்­பட்­டுள்ள நிலை­மையில் பள்­ளி­வாசல் நிர்­வா­க­மா­னது மீண்டும் அதனை திறப்­ப­தானால் ஜனா­தி­ப­தி­ய­வர்­களின் உத்­த­ரவை நாடி­நிற்­கின்­றது.

நியா­ய­மான அவர்­களின் கோரிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­ய­வர்­களின் கவ­னத்­திற்குக் கொண்­டு­செல்­ல­வேண்­டிய பொறுப்பு அர­சியல் பிர­தி­நி­தி­க­ளான நமது தலை­களில் தற்­போது சுமத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நான் கரு­து­கின்றேன்.

ஜனா­தி­ப­தி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து சாத­க­மான உத்­த­ரவு கிடைக்கும் பட்­சத்தில் நம்­மீது சேற்றை வாரி வீசி­வ­ரு­ப­வர்­களின் எதிர்ப்­ப­லை­களும் ஓரளவு தணிந்து விடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. எனவே நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினை உடனடியாகக் கூட்டுமாறு மீண்டும் ஒருமுறை வேண்டி விடைபெறு கின்றேன்.
« PREV
NEXT »

No comments