Latest News

July 23, 2013

வடமாகாண சபைக்கான கூட்டமைப்பு வேட்பாளர் நியமனத்தில் இணக்கம்
by admin - 0


வட மாகாண சபைக்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் நிய­மன விட­யத்தில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்­சி­க­ளுக்கு இடை­யேயும் இணக்கம் எட்­டப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் ஐந்து கட்­சி­களின் சார்­பிலும் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்தில் உள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் நிய­மனக் குழு கூடி­யது. இதன்­போதே இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­ணங்க யாழ்ப்­பா­ணத்தில் கூட்­ட­மைப்பின் பொது வேட்­பா­ள­ராக சி.வி.விக்­னேஸ்­வரன் நிறுத்­தப்­ப­ட­வுள்ளார். ஏனைய 18 வேட்­பா­ளர்­களில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கு ஏழு இடங்­களும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கு நான்கு இடங்­களும் ரெலோ­வுக்கு மூன்று இடங்­களும் புளொட் மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு தலா இரண்டு இடங்­களும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு மூன்று இடங்­களும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு இரண்டு இடங்­களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ ஆகி­ய­வற்­றுக்கு தலா ஒவ்­வொரு இடங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்­சி­க­ளுக்கு தலா இரண்டு இடங்­களும் புளொட் மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு தலா ஒவ்­வொரு இடங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

வவு­னியா மாவட்­டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ, தமி­ழ­ரசுக் கட்சி , புளொட் ஆகிய கட்­சி­க­ளுக்கு தலா இரண்டு இடங்­களும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு ஒரு இடமும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­போன்று மன்­னாரில் ரெலோ­வுக்கு மூன்று இடங்­களும் தமி­ழ­ரசுக் கட்சி , ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்­சி­க­ளுக்கு தலா இரண்டு இடங்­களும் புளொட்­டுக்கு ஒரு இடமும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

வேட்­பாளர் ஒதுக்­கீடு விட­யத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து இந்த ஐந்து கட்­சி­களும் தமது வேட்­பா­ளர்­களை தெரிவு செய்யும் விட­யத்தில் அக்­கறை காட்­டி­வ­ரு­கின்­றன.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் யாழ். மாவட்­டத்தில் கட்­சியின் துணைப் பொதுச் செய­லாளர் சி.வி.கே. சிவ­ஞானம், பாசை­யூரைச் சேர்ந்த இ. ஆனோல்ட் , புலி­களின் முன்னாள் திரு­கோ­ண­மலை மாவட்ட பொறுப்­பாளர் எழி­லனின் மனைவி ஆனந்தி, வட­ம­ராட்­சியை சேர்ந்த திரு­மதி சிவ­யோகம் , தென்­ம­ராட்­சியை சேர்ந்த சட்lத்­த­ரணி சயந்தன் ஆகியோர் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளது பெயர்கள் வேட்­பாளர் பட்­டி­யலில் சேர்க்­கப்­படும் என தெரி­கின்­றது.
« PREV
NEXT »

No comments