இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களில் ஸ்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் நல்லிணக்க முனைப்புக்களை தீவிரப்படுத்த வேண்டுமென பர்ட் வலியுறுத்தியுள்ளார்.
2011ம் ஆண்டு தங்காலையில் கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ, கொலை வழக்கு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இன்றி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பர்ட் கோரியுள்ளார்.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் நல்லிணக்க முனைப்புக்களை தீவிரப்படுத்த வேண்டுமென பர்ட் வலியுறுத்தியுள்ளார்.
2011ம் ஆண்டு தங்காலையில் கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ, கொலை வழக்கு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இன்றி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பர்ட் கோரியுள்ளார்.
No comments
Post a Comment