Latest News

July 10, 2013

தேர்தலை சாட்டாக வைத்து தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை படுகொலை செய்ய திட்டம்
by admin - 0

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறத் திட்டமிட்டுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியவாதிகள் சிலரை படுகொலை செய்வதற்கு சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக தமிழ்த் தேசிய சக்திகளின் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் கொண்ட செயற்படுகளால் அச்சமும் ஆத்திரமும் அடைந்துள்ள சிறீலங்கா அரசு இந்த படுகொலைத் திட்டத்தை அரங்கேற்ற தருணம் பார்த்துள்ளதாக அறிய முடிகிறது.
இதன் மூலம், சிங்கள புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட படுகொலை என்பதற்குமப்பால், தேர்தல் கால வன்முறை என்ற கருத்தை பரப்பி, தமது படுகொலை படலத்தை முன்னெடுப்பதே சிறீலங்கா புலனாய்வுத் துறையின் இரகசியத் திட்டம் என்று விடயம் அறிந்த வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய படுகொலை நடவடிக்கைகள் வெற்றியளித்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் அடிப்பணியாதுள்ள தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தலாம் என்பது சிங்கள புலனாய்வுத் துறையின் திட்டமாகும் என அறிய முடிகிறது.

« PREV
NEXT »

No comments