Latest News

July 23, 2013

இலங்கையில் இருந்து 70 பேருடன் புறப்பட்ட படகு மறைவு
by admin - 0

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை மிரிஸ்ஸ என்ற இடத்தில் இருந்து கடந்த 17ம் திகதியன்று புறப்பட்டதாக கூறப்படும் இந்தப்படகிற்கு என்ன நேர்ந்தது என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.
படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படகு தொடர்பில் இலங்கை கடற்படைக்கு எவ்வித தகவல்களும் தெரியவில்லை. இந்தநிலையில் படகில் சென்றோரின் உறவினர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியூகினிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான உடன்படிக்கையையும் கருத்திற்கொள்ளாது இந்த அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
« PREV
NEXT »

No comments