Latest News

June 11, 2013

புதூர் நாகதம்பிரான் பொங்கல் விழா
by admin - 0




வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா நேற்று கிராமிய வழிபாட்டு முறைகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

காலையில் இருந்து விசேட அபிசேகங்களும் பூஜைகளும் இடம்பெற்று இரவு பொங்கல் விழா இடம்பெற்றது. அத்துடன் பறவைக் காவடிகளும், காவடிகளும் என தமது வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.

இதேவேளை, வருடாந்தம் இடம்பெறும் இந்த பொங்கல் விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்தும் மக்கள் வருகை தருவது வழமை. எனினும் இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கு சுமார் 1 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
« PREV
NEXT »

No comments