Latest News

June 08, 2013

கொக்கிளாயில் தமிழர் காணியில் அத்துமீறி அமைக்கப்பட்ட பௌத்த விகாரை விரைவில்திறக்கப்படவுள்ளது
by admin - 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான
கொக்கிளாய்- முகத்துவாரம்பகுதியில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களுக்காக தமிழருக்குச் சொந்தமான
நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட
பௌத்த விகாரை விரைவில் வழிபாட்டுக்கு விடப்படவுள்ளது. தனியாருக்கும், அரசாங்க பிரதேச வைத்தியசாலைக்கும் சொந்தமான சுமார் 4
ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள பௌத்த
பிக்கு ஒருவர், இந்த நிலத்திலிருந்த
இந்து ஆலயத்தையும் கற்றிவிட்டு அதில்
விகாரை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நிலத்திற்கு உரிமையான மக்கள் பல தடவைகள் தமது நிலத்தை மீளவும் வழ
ங்கவேண்டும் எனக்கோரியிருந்தபோதும்
அந்த நிலம் வழங்கப்படாத நிலையில் அந்த
நிலத்தில் சுமார் 6அடி உயரமான புத்தர்
சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் சிங்கள மக்கள் வழிபட
அனுமதிக்கப்படவுள்ளதுடன், மேலதிகமாக
குறித்த நிலத்தில் பௌத்த
பிக்கு தங்கியிருப்பதற்கு கட்டிடம்
ஒன்று அமைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments