Latest News

June 05, 2013

தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்கின்றார் அவர்தான் எங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார் - வைகோ
by admin - 0

தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்கின்றார் அவர்தான் எங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

முழுமையான மதுவிலக்கே எமது இலக்கு என்று போராடும் வைகோ அவர்கள் சத்தியம் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்து..

காலம் காலமாக தமிழகம் கட்டிக்காத்துவந்த பண்பாடு நாகரீகம் அனைத்துமே பேரழிவிற்கு ஆளாகிவிடும் என்ற காரணத்தால் மது எனும் கொடிய அரக்கனிடம் இருந்து விடுபட போராடுகின்றோன் கொலை கொள்ளை, கற்பழிப்பு,பாலியல் வல்லுறவு அனைத்திற்குமே மது காரணமாக அமைந்துள்ளது.

வளர்கின்ற தலைமுறைக்கும் இந்த மது தொற்றுகின்றது குஜராத்தில் மது இல்லை அவர்கள் அரசுநடத்தமுடிகின்றது மதுக்கடைகளால் தமிழ்நாட்டு அரசிற்கு வருமானம் வருவதாக சொல்கின்றது அதனால் எத்தனை இலட்சம் குடும்பங்கள் பாளாகிக்கொண்டிருக்கின்றது.

தமிழீத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளமைக்கு முன்னர் நான் அதுதொடர்பில் தமிழக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.
இந்திய நாடாளமன்றத்தில் தமிழீத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றும் நிலை வரும் என்பதை சொல்லிநிக்கின்றேன். தமிழ்நாட்டில் பல கட்டங்களில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்அவர்கள் தமிழக உரிமைகளை காக்க தவறிவிட்டார்கள்.

தலைவர் அவர்கள் இருக்கின்றார் அவர்தான் எங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளி இந்தியா அரசு விடுதலைப்புலிகளை அழித்துவிடுங்கள் என்று அனைத்து ஆயுத தளபாடங்களும் கொடுத்த குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கின்ற காங்கிரஸ்கட்சி இந்த பாவக்கரையினை துடைத்துக்ககொள்ள முடியாது இந்திய அரசு இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளி என்பதை தெட்டத்தெளிவாக சொல்லி நிக்கின்றேன் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments