Latest News

June 10, 2013

இவரை உங்களுக்கு தெரியுமா ? கொஸ்கோவில் கண்டது உண்டா ?
by admin - 0

படத்தில் நீங்கள் பார்க்கும் பிரசன்னா என்ப்படும் இந்த இளைஞர் ஒரு பிள்ளையின் தகப்பன் ஆவர். பிரித்தானியாவின் வட்பேட் என்னும் இடத்தில் உள்ள கொஸ்கோ காஷ் அன் கரி கார் பார்க்கில் இவர் கடந்த 26.05.2013 அன்று நினைவிளந்து கிடந்துள்ளார். இவர் மண்டையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக, ரத்தப்பெருக்குடன் இருந்த இவரை பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இருப்பினும் 11 நாட்கள் கழித்து 05.06.2013 அன்று இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஈழத் தமிழரான இவர் தனது கடைக்கு சிகரெட் வாங்கும் பொருட்டு கொஸ்கோ சென்றுள்ளார். 34 வயதான பிரசன்னா 26.05.2013 அன்று மதியம் 2.45 மணிக்கு கொஸ்கோ கார் பார்க்கில் நினைவிளந்த நிலையில் இருந்திருக்கிறார். இவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிர்வு இணையம் பொலிசாரை தொடர்புகொண்டு கேட்டபோது, தலையில் ஏற்பட்ட காயத்தால் பிரசன்னா உயிரிழந்தார் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மற்றும் பிரசன்னா தனது வாகனத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் அன்று சிகரெட் வாங்கச் சென்றதாக அவர் குடும்பத்தார் மேலும் தெரிவித்துள்ளார்கள். எனவே அவரிடம் இருந்து சிகரெட்டைப் பறிக்க யாராவது இவ்வாறு செய்தார்களா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது. எனவே வட்பேட்டில் உள்ள கொஸ்கோவுக்கு, யாராவது தமிழர்கள் அன்று(26.05.2013) சென்றிருந்தால், மற்றும் குறிப்பிட்ட இன் நபரைப் பார்த்திருந்தால் பொலிசாரோடு உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டி.சி.ஐ கென்ட் எனப்படும் பொலிஸ் பிரிவினரே இந்த வழக்கை கையாள்கிறார்கள். தொடர்புகொள்ளப்படுபவர்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

contact DCI Kent on the incident room number 01707 355959 or alternatively Crimestoppers, the independent charity, in confidence on 0800 555 111.

athirvu.com
« PREV
NEXT »

No comments