Latest News

June 03, 2013

தம்பிலுவிலில் ஆயுதங்கள் மீட்பு
by admin - 0

திருக்கோவில் தம்பிலுவில் பிரதேச வீடு ஒன்றில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
ஆயுதங்களை நேற்று முன்தினம் மாலை மீட்டெடுத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிலுவில் பிரதான வீதியில் கலைமகள் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றில் கடந்த கால
யுத்தத்தின் போது ஆயுதக்குழுவொன்று அங்கு தங்கி இருந்து பின்னர்
அவ்வீட்டை விட்டு வெளியேறிருந்தது. இந்நிலையில் தற்போது இவ்வீட்டில் குடியேறுவதற்காக வீட்டு உரிமையாளர் திருத்த வேலைகளில் ஆடுபட்டபோது நீர்குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டும் போது பொதி ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த
பொதியினை சோதனையிட்டபோது ரி-56 ரக துப்பாக்கி இரண்டும் டொம்மா ரக துப்பாக்கி 60ரவைகள் மற்றும் 2 மகசீன் என்பவற்றை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments