Latest News

June 07, 2013

மீண்டும் போர் வெடிக்கலாம் -சம்பந்தன்
by admin - 0

 தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும் ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில்
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த
எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது..
கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இனஒடுக்குமுறைகள்தான் விடுதலைப் புலிகளின்
தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது. 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களைப்
பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நாட்டை பிளவுபடுத்தும் என்ற அச்சம் தேவையற்றது. அத்தகைய பரப்புரைகளைச் செய்யும் ஜாதிக ஹெல உறுமயவோ தேசிய சுதந்திர முன்னணியோ பெரும்பான்மையான சிங்கள மக்களின்
ஆதரவைக் கொண்டவையல்ல. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments