Latest News

June 14, 2013

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அமைச்சு பதவி பெறுகிறார் ?
by admin - 0

தமிழ் இன போராட்ட அழிப்பானாலும்சரி தமிழ் மக்களின் அவலமானாலும் சரி முதலில் தமிழர்களை சீரளித்தது தமிழ் ஆயுதக் குழு என்றால் மிகையாகாது அந்த வகையில் ஸ்ரீ டெலோவில் தன்னைத் தான் தலைவராக அறிவித்த உதயராசாவின் உதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை திரை மறைவில் சந்தித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சந்திப்பின் பின்னனி பற்றி இச்சந்திப்பு முயற்சியில் ஈடுபட்ட உதயராசா நண்பர் ஒருவரிடம் சில விடயங்களைக் கூறியுள்ளார் அவை வருமாறு

அரசியலில் எதுவும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை நண்பன் வினோவிடம் உள்ளது அதற்கு ஒரு அமைச்சுப் பதவி தேவை அதனது தேவை உணர்ந்தே சந்திக்க ஆரம்பித்துள்ளேம் இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தாலும் எமக்கு அங்கு நடை பெறும் விடயங்களை உடனுக்குடன் துல்லியமாக வழங்குவதில் வல்லவர் அப்படிப்பட்ட உயரிய பண்புள்ள இவரை அமைச்சுப் பதவியில் அமர வைக்க என் மனம் ஆவலாயுள்ளது அதனால் தான் ஆரம்பகட்ட சந்திப்பு இது என கூறியுள்ளார்

டெலோவில் இருந்து பிரிந்தவரே உதயராசா வினேவையும் பிரித்து தன்னுடன் இணைப்பாரா செல்வம் தனித்து விடுவாரா என பல வினா அரசியல் வட்டாரங்களில் உலாவினாலும்

தமிழ் தேசியத்தை அம்பாறையில் விற்றார் பியசேன வன்னியில் விற்பாரா?? அல்லது காப்பாரா வினோ…
« PREV
NEXT »

No comments