Latest News

June 07, 2013

7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோம்: இராணுவ வீரர் அடையாளம் காட்டப்பட்டார்
by admin - 0

 வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி இன்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுங்கேணி சீனியாமோட்டை பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பக் காத்திருந்த இந்தச் சிறுமி அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் இராணுவ வீரர் ஒருவர்
கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள
பற்றைக்குள்ளிருந்து இந்தச் சிறுமி மீட்கப்பட்டிருந்தாள். பாதிக்கப்பட்ட சிறுமி இன்று வவுனியா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு நடத்திய அந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களுக்கும்
பெண்களுக்கும் எதிராக புரியப்படுகின்ற வன்முறைகளுக்கு எதிராக பெருமளவிலானோர் குரல் கொடுத்தனர்.
« PREV
NEXT »

No comments