Latest News

June 07, 2013

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை
by admin - 0

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளில் தற்போதும்
ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக
இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெளிநாடு வாழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என இலங்கை நினைப்பதாக தெரிவித்துள்ளஅமெரிக்கா, புலிகளின் சர்வதேச பொருளாதார தொடர்புக்கு தடை விதிக்க பல வழிகளில்
இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் பயிற்சியளித்திருக்கக் கூடும் என இலங்கை சந்தேகிக்கிறது. பேரணியின்போது நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் செயல்பாடு எதுவும் இல்லை என கூறியுள்ளது. இலங்கையில் நடைபெறும்போராட்டங்களுக்கு விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் நிதியுதவி செய்வதாக கூறிவரும் ராஜபக்ச அரசு, அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும்
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments