Latest News

June 10, 2013

40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி… டெல்லியில் ஜெ அறிவிப்பு
by admin - 0

நாடளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடப் போவதாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மத்திய திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார். மத்திய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து 2013-2014ஆம் நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்கு ரூ.37128 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார். அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தா
« PREV
NEXT »

No comments