Latest News

May 10, 2013

இலங்கை கடற்படை தாக்குதலில் தொண்டி மீனவர்கள் 6 பேர் காயம்
by admin - 0

கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில்
தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில
தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த
இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும்
சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக
பேசி தாக்குகிறது. கச்சதீவு அருகே, மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளது'' என்றனர்.
« PREV
NEXT »

No comments