Latest News

May 06, 2013

தனுஷ்கோடி 20 மீனவர்கள் பிடித்த இலங்கை கடல்படை
by admin - 0

ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளிலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்து கைது செய்து வந்தனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 30 பேர் இன்னும் இலங்கையில் இருந்து வருகின்றனர்.

தற்போது மீன்பிடி தடை காலம் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகுகளில் மட்டுமே சிலர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது

« PREV
NEXT »

No comments