Latest News

April 10, 2013

சிரானி பண்டாரநாயக்க நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி
by admin - 0

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக அரசாங்க சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிரானி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கின்றார்.

நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடொன்றில் தஞ்சமடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என சிங்கள பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments