Latest News

April 04, 2013

மன்னார் தனியார் பஸ்கள் இன்று இரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பில்
by admin - 0

முன்னறிவித்தல் ஏதுமின்றி வழித்தடத்திற்கான அனுமதியை பெற கேள்வி கோரப்பட்டுள்ளமையினால் மன்னார் மாவட்ட தனியார் பஸ்கள் இன்று நள்ளிரவு முதல் சேவையில் ஈடுபடாது என மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மன்னார் மாவட்ட செயலகத்தினூடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்துக்குமான அனுமதியை பெறுவதற்கு கேள்வி கோரல் விடுத்துள்ளது.

கடந்த யுத்த காலம் முதல் மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு கஸ்டத்தின் மத்தியில் தனது சேவையை மக்களுக்கு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக பல நெருக்கடிகளை பஸ் உரிமையாளர்கள் எதிர்கொண்டிருந்தனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கமானது பொறுப்புணர்வுடன் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வரும் நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தன்னிச்சையான இச் செயற்பாடுகளை கண்டித்து இன்று இரவு முதல் நாம் பஸ் சேவைகளை நிறுத்தி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

இது தொடர்பில் தாம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் இன்று கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments