தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை வெறும் மாயை என
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற
தந்தை செல்வா ஞாபகார்த்த நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்த வருடம் வடமாகாணசபைத் தேர்தல்
நடைபெறாது என நான் ஆணித்தரமாக
கூறுகிறேன். காரணம்,
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பல
நடவடிக்கைகள் வடமாகாணத்தில்
நடைபெற்று வருகின்றன. வடமாகாணத்தில் தேர்தல் நடந்தால், அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்காது என்பதன வெளியாளருக்கு இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது எனும் மாயையை உருவாக்க, பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதால் அதற்கு ஏற்ற விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத்தான் நான் கருதுகின்றேன்,' என்றார் முன்னாள்
உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
No comments
Post a Comment